பள்ளி மாணவர்கள் சாதனை

தடகள போட்டியில் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.

Update: 2023-07-29 18:38 GMT

வடக்கன்குளம்:

சென்னை நேரு விளையாட்டு அரங்கில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான தடகள போட்டிகள் நடைபெற்றது. பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் வடக்கன்குளம் எஸ்.ஏ.வி. பாலகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்று பல்வேறு போட்டிகளில் வென்றனர். மாணவி வர்ஷா உயரம் தாண்டுதலில் இரண்டாம் இடமும், மாணவி ரின்சி ரோஸ் குண்டு எறிதலில் இரண்டாம் இடமும், வட்டு எறிதலில் மூன்றாம் இடமும், மாணவர் லனிஸ் ஜேசுவா குண்டு எறிதலில் மூன்றாம் இடமும் பிடித்தனர்.

சாதனை படைத்த மாணவர்கள் மற்றும் பயிற்சி அளித்த ஆசிரியர்கள் ஜஸ்டின், முனிராஜா, அய்யப்பன் ஆகியோரை பள்ளி சேர்மன் கிரகாம்பெல், பள்ளி தாளாளர் திவாகரன், முதல்வர் சுடலையாண்டி மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாராட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்