டிராக்டர் மோதி பள்ளி ஆசிரியை பலி

டிராக்டர் மோதி பள்ளி ஆசிரியை பலியானார்.

Update: 2022-08-05 19:28 GMT

அறந்தாங்கி அருகே சிலட்டூர் மேல் நிலைப்பள்ளியில் முதுகலை கணினி ஆசிரியையாக கார்த்தியாயினி (வயது 42) பணியாற்றி வந்தார். நேற்று பள்ளி முடிந்து அவர் அறந்தாங்கி- பட்டுக்கோட்டை சாலையில் மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற டிராக்டர் மொபட் மீது மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே கார்த்தியாயினி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்