ராமேஸ்வரம் அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த 700 கிலோ கடல் அட்டை பறிமுதல்

இலங்கைக்கு கடத்துவதற்காக பதப்படுத்தப்பட்ட 700 கிலோ எடை கொண்ட கடல் அட்டையை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

Update: 2022-06-23 20:33 GMT

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை அடுத்த வேதாளை கடற்கரைப் பகுதியில், இலங்கைக்கு கடத்துவதற்காக கடல் அட்டை பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது‌.

இதையடுத்து, அப்பகுதிக்கு விரைந்து சென்ற வனத்துறையினர் இலங்கைக்கு கடத்துவதற்காக பதப்படுத்தப்பட்ட 700 கிலோ எடை கொண்ட கடல் அட்டை மற்றும் பதப்படுத்துவதற்கு பயன்படுத்திய, அலுமினிய பாத்திரங்கள், ஒரு ஜெனரேட்டர் ஆகியவற்றை கைப்பற்றி விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் கைப்பற்றப்பட்ட கடல் அட்டையின் மதிப்பு சர்வதேச சந்தையில் சுமார் 35 லட்ச ரூபாய் இருக்கும் என வனத்துறையினர் தெரிவித்தனர். இதையடுத்து, இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்