சாமனிய மக்களுக்கு சேவை செய்தால் மனநிறைவு கிடைக்கும் - சபாநாயகர் அப்பாவு

சாமனிய மக்களுக்கு சேவை செய்தால் மனநிறைவு கிடைக்கும் என சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.

Update: 2023-02-04 09:56 GMT

நெல்லை,

நெல்லை மாவட்டம் ஏர்வாடி முதியோர் புதுவாழ்வு இல்லத்தில் புதிய கட்டடத்தை தமிழக சபாநாயகர் அப்பாவு இன்று திறந்து வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது,

முதியோர் இல்லங்களில் சேவை செய்வதை பல பேர் பெருமையாக எண்ணுகின்றனர். சொந்த பணத்தை அதற்கு கொடுத்து பெருமைபடுவதோடு மட்டுமில்லாமல் அவர்களும் மனநிறைவு அடைகிறார்கள். சமானிய மக்களுக்கு சேவை செய்து மனநிறைவு அடைந்து அதில் கிடைக்கும் சுகம் அனுபவித்தவர்களுக்கு மட்டும் தான் தெரியும்.

மற்றவர்களுக்கு தெரிய நியாயம் இல்லை என்று பேசினார்.   

Tags:    

மேலும் செய்திகள்