சிறுமிக்கு பாலியல் தொந்தரவு முதியவர் மீது வழக்குபதிவு

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது

Update: 2023-04-11 18:45 GMT

காரைக்குடி

காரைக்குடி அருகே உள்ள ஒரு பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கு 13 வயதில் மகள் உள்ளார். சிறுமியின் தாய் கூலி வேலைக்கு சென்று வந்தார். இதனால் அடிக்கடி வெளியூர் சென்று விடுவார். வாரம் ஒருமுறை மகளை பார்க்க வருவதுண்டு. இதனால் இந்த சிறுமி உறவினர் வீட்டில் தங்கி அதே பகுதியில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது அருகில் வசித்து வந்த முத்து (வயது 65) என்பவர் சிறுமியை தனது வீட்டில் வந்து டி.வி பார்க்குமாறு அழைத்துள்ளார். பின்னர் டி.வி பார்க்க சென்ற சிறுமியிடம் அந்த முதியவர் முத்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் பள்ளத்தூர் போலீசார் முத்து மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்