தஞ்சையில் தென்மண்டல அளவிலான சிலம்பம் போட்டி - திறமையை வெளிப்படுத்தி அசத்திய வீரர், வீராங்கனைகள்

சுமார் 600-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் போட்டியில் கலந்து கொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.

Update: 2022-09-04 20:16 GMT

தஞ்சை,

தஞ்சை மாவாட்டத்தில் பாரம்பரிய சிலம்பம் விளையாட்டுக் கலை கழகம் சார்பில் தென்மண்டல அளவிலான சிலம்ப போட்டி நடைபெற்றது. இதனை தஞ்சை மேயர் சண்.ராமநாதன் தொடங்கி வைத்தார்.

இந்த போட்டியில் சுமார் 600-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். இதில் ஒற்றை கம்பு சண்டை, இரட்டை கம்பு சண்டை, வாள்வீச்சு, மான்கொம்பு தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பையும், சான்றிதழும் வழங்கப்பட்டன. 

Tags:    

மேலும் செய்திகள்