சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்

பக்தர்களின் வசதிக்காக குளிர்சாதன வசதி கொண்ட சொகுசு பேருந்துகள் மற்றும் சாதரண பேருந்துகள் ஆகியவை இயக்கப்பட உள்ளன.

Update: 2023-11-14 20:46 GMT

சென்னை,

கார்த்திகை மாதம் தொடங்கவுள்ள நிலையில், தமிழகத்தில் இருந்து அதிக அளவில் பக்தர்கள் சபரிமலைக்கு செல்வார்கள். அவர்கள் வசதிக்காக சிறப்பு பேருத்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு போக்குவரத்து கழக இயக்குனர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் நவம்பர் 16 முதல் ஜனவரி 16 வரையில் சென்னை, திருச்சி, மதுரை, கடலூர், புதுச்சேரி ஆகிய இடங்களில் இருந்து பம்பைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

குளிர்சாதன வசதி கொண்ட சொகுசு பேருந்துகள் மற்றும் சாதரண பேருந்துகள் ஆகியவை இயக்கப்பட உள்ளன. 27.12.2023 முதல் 30.12.2023 வரை சபரிமலை நடை சாத்தப்பட்டு இருக்கும் என்பதால் 26.12.2023 முதல் 29.12.2023 வரையில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல மொத்தமாக குழுவாக செல்லும் பக்தர்களுக்கு அரசு சிறப்பு பேருந்து வாடகைக்கும் விடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்