10-ம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு, சிறப்பு பயிற்சி வகுப்புகள் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை காலை வெளியிடப்பட உள்ளன.

Update: 2024-05-09 17:08 GMT

சென்னை,

தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு, மாநிலம் முழுவதும் 4,107 மையங்களில் கடந்த மார்ச் 26 முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரை நடந்தது.9.08 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதையடுத்து, மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணிகள் 88 முகாம்களில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட உள்ளன.

இந்த நிலையில், 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு, 13ம் தேதி முதல் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் சனிக்கிழமை தோறும் மாதிரி தேர்வுகள் நடத்தப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது

Tags:    

மேலும் செய்திகள்