புனித அந்தோணியார் ஆலய தேர்பவனி

புனித அந்தோணியார் ஆலய தேர்பவனி பெற்றது.;

Update:2023-06-19 00:38 IST

கறம்பக்குடியில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 5 நாட்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை தொடர்ந்து நவநாள் திருப்பலி நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தேர் பவனி நேற்று விமரிசையாக நடந்தது. இதையொட்டி ஆலயம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தது. முக்கிய நிகழ்வான தேர்பவனி மாலையில் தொடங்கியது. வண்ண மின் விளக்குகள் மற்றும் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் புனிதரின் ஊர்வலம் முக்கிய வீதிகளின் வழியாக சென்றது. இதில் கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி ஏராளமான இந்து சமூகத்தை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர். முன்னதாக கோட்டைக்காடு பங்குதந்தை அருள் பிரிட்டோ தலைமையில் கூட்டு திருப்பலி நடைபெற்றது. இதில் கறம்பக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளானோர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்