முன்விரோதம் காரணமாக நண்பருக்கு கத்திக்குத்து

ஆம்பூர் அருகே முன்விரோதம் காரணமாக நண்பரை கத்தியால் குத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-07-03 19:03 GMT

ஆம்பூர் அடுத்த நாச்சார்குப்பம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 28). கூலி வேலை செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் இளையராஜா (29). இவர் ஆம்பூரில் உள்ள தனியார் ஷு கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இருவரும் நண்பர்கள். சில மாதங்களாக இருவருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று வெங்கடேசன், இளையராஜா பணிபுரியும் ஷு தொழிற்சாலைக்கு சென்றுள்ளார். பின்னர் இளையராஜாவை தொழிற்சாலையை விட்டு வெளியே வரவழைத்து, மறைத்து வைத்திருந்த கத்தியால் ரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்த இளையராஜாவை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்