மாநில அளவிலான சிலம்ப போட்டி

ஆரணியில் மாநில அளவிலான சிலம்ப போட்டி நடந்தது.

Update: 2023-02-12 09:40 GMT

ஆரணி

ஆரணி கோட்டை மைதானத்தில் ஆரணி கோட்டை சிலம்பம் குழுவின் சார்பாக மாநில அளவிலான சிலம்ப போட்டி நடந்தது.

போட்டியில் திருவண்ணாமலை, வேலூர், கடலூர், விழுப்புரம், திருவள்ளூர், கள்ளக்குறிச்சி உள்பட தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 700-க்கும் மேற்பட்ட சிலம்பம், ஒற்றைக்கொம்பு, தொடும் முறை, இரட்டைக் கொம்பு, சுருள்வால் போட்டியில் கலந்து கொள்வதற்காக வீரர்-வீராங்கனைகள் வந்தனர்.

இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பையும் சான்றிதழும் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்