அரசு பஸ் மீது கல்வீச்சு

சந்தவாசல் அருகே அரசு பஸ் மீது கல்வீசிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.;

Update:2023-07-30 21:52 IST

கண்ணமங்கலம்

சேத்துப்பட்டு அருகே உள்ள பெரியகொழப்பலூர் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 53) அரசு பஸ் டிரைவர்.

இவர் நேற்று திருவண்ணாமலையில் இருந்து வேலூருக்கு அரசு பஸ்சை டிரைவர் பன்னீர்செல்வம் ஓட்டிச்சென்றார்.

சந்தவாசல் அருகே தேப்பனந்தல் கூட்ரோட்டில் இரவு 7 மணிஅளவில் வந்தபோது மர்மநபர் ஒருவர் பஸ்சின் முன்புற கண்ணாடி மீது கல்வீசினார்.

இதில் பஸ்சின் முன்புற கண்ணாடி உடைந்தது. மேலும் பன்னீர்செல்வம் காயமடைந்தார்.

இதுகுறித்து பன்னீர்செல்வம் சந்தவாசல் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பஸ் மீது கல்வீசிய நபரை தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்