தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த விரக்தியில் 10-ம் வகுப்பு மாணவர் தற்கொலை

தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த விரக்தியில் 10-ம் வகுப்பு மாணவர் தற்கொலை செய்து கொண்டாா்.

Update: 2022-06-21 16:51 GMT


விழுப்புரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் கணேசன் மகன் சுரேந்தர் (வயது 15). இவர் விழுப்புரத்தில் உள்ள ஓரியண்டல் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்தார். நேற்று முன்தினம் வெளியான பொதுத்தேர்வு முடிவில் மாணவர் சுரேந்தர், தேர்ச்சி பெற்றபோதிலும் குறைந்த மதிப்பெண் எடுத்துள்ளதாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்த அவர் நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கரப்பான் பூச்சிக்கொல்லியை எடுத்து குடித்து விட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை பெற்றோர் மீட்டு சிகிச்சைக்காக விழுப்புரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இறந்தார்.

இதுகுறித்த புகாரின்பேரில் விழுப்புரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்