கிருஷ்ணகிரியில் திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது

கிருஷ்ணகிரியில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் நடைபெற்று வரும் திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் சரயு தலைமையில் நடந்தது.

Update: 2023-10-25 19:45 GMT

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் நடைபெற்று வரும் திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் சரயு தலைமையில் நடந்தது.

ஆய்வு கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஊரக வளர்ச்சித்துறை சார்பாக நடைபெற்று வரும் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் கலெக்டர் சரயு தலைமையில் நேற்று நடந்தது. இதில் உதவி திட்ட அலுவலர் அருள்மொழிதேவன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் பசுபதி மற்றும் உதவி திட்ட அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொறியாளர்கள் மற்றும் உதவி பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் 2022-2023-ம் நிதியாண்டில் ஊரக வளர்ச்சித்துறை சார்பாக 10 ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்று வரும் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா வீடு வழங்கும் திட்டம், பசுமை வீடுகள் திட்டம், சமத்துவபுரம், நீலப்புரட்சி திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், பள்ளிகள் உட்கட்டமைப்பு மேம்பாட்டுத்திட்டம் குறித்து கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

கட்டுமான பணிகள்

தொடர்ந்து கலெக்டர் பேசுகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை சார்பாக நடைபெற்று வரும் திட்டப்பணிகளான சாலை அமைக்கும் பணிகள், சிறு பாலங்கள் கட்டுமான பணிகள், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டுமான பணிகள், குடிநீர் திட்ட பணிகள் மற்றும் தெருவிளக்கு உள்ளிட்ட திட்டப்பணிகளை விரைந்து முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும் என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்