மகளிர் உரிமை திட்டம் குறித்து ஆய்வு
மகளிர் உரிமை திட்டம் குறித்து ஆய்வு நடைபெற்றது.
தமிழக அரசின் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை செயலாளர் டாக்டர் தரேஸ் அகமது பெரம்பலூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் விண்ணப்பித்தவர்களின் தகவல்கள் முறையாக பதிவேற்றப்பட்டுள்ளதா? என்பது குறித்து நேற்று நேரில் வந்து ஆய்வு செய்தார். அப்போது அவர் பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட சாமியப்பா நகர் பகுதியில் விண்ணப்பதாரர்களின் வீடுகளுக்கே சென்று மாவட்ட கலெக்டர் கற்பகம் முன்னிலையில் ஆய்வு செய்தார்.