கட்டிட மேஸ்திரி தூக்குப்போட்டு தற்கொலை

Update: 2023-07-06 19:00 GMT

பாப்பாரப்பட்டி:

இண்டூர் அருகே உள்ள ராஜா கொல்லஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன். இவருடைய மகன் சக்திவேல் (வயது 45). கட்டிட மேஸ்திரி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகன்கள் இருந்தனர். இதில் மூத்த மகன் முனியப்பன் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சாலை விபத்தில் இறந்துவிட்டார். மகன் இறந்த சோகத்தில் இருந்து மீளாத சக்திவேல் தனது வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து இண்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்