தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

தர்மபுரியில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-06-10 20:44 GMT

தர்மபுரி:

கிருஷ்ணாபுரம் அருகே இண்டமங்கலம் பகுதியை சேர்ந்த தொழிலாளி சின்னசாமி (வயது 54). இவர் மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கி கிடந்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்தனர். இந்த நிலையில் சின்னசாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கிருஷ்ணாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்