விஷம் குடித்து டிரைவர் தற்கொலை

ஊத்தங்கரை அருகே விஷம் குடித்து டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-06-26 16:47 GMT

ஊத்தங்கரை:

ஊத்தங்கரை அருகே உள்ள துறிஞ்சிப்பட்டியை சேர்ந்தவர் சூர்யா (வயது 25). டிரைவர். இவர் தனது தந்தையிடம் செலவுக்காக பணம் கேட்டுள்ளார். அப்போது அவரது தந்தை பணம் கொடுக்கவில்லை. இதனால் மனமுடைந்த சூர்யா விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். அவரை குடும்பத்தினர், உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சூர்யா பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

Tags:    

மேலும் செய்திகள்