மதுவில் விஷம் கலந்து குடித்து விவசாயி தற்கொலை

நல்லம்பள்ளி அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-09-27 18:45 GMT

நல்லம்பள்ளி:

நல்லம்பள்ளி அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

குடும்ப தகராறு

நல்லம்பள்ளி அருகே உள்ள லளிகம் கட்டுக்கார தெருவை சேர்ந்தவர் கருப்பண்ணன் (வயது 68). விவசாயி. இவருக்கு மனைவி மற்றும் மகன்கள் உள்ளனர். இதனிடையே கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்றும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் மனமுடைந்த கருப்பண்ணன் கடந்த 25-ந் தேதி மதுவில் விஷம் கலந்து குடித்துவிட்டு வீட்டு அருகே வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி கிடந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

பரிதாப சாவு

இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அதியமான்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விவசாயி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்