தனியார் நிறுவன மேலாளர் உள்பட 2 பேர் தற்கொலை

ஓசூர், சிங்காரப்பேட்டையில் தனியார் நிறுவன மேலாளர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

Update: 2023-01-24 18:45 GMT

ஊத்தங்கரை

ஓசூர், சிங்காரப்பேட்டையில் தனியார் நிறுவன மேலாளர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

தனியார் நிறுவன மேலாளர்

ஓசூர் சாந்தி நகரை சேர்ந்தவர் தபாரக் உல்லா (வயது 26). இவர் புதுடெல்லியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் உற்பத்தி பிரிவு மேலாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த 7 மாதங்களாக அவர் வீட்டில் இருந்து பணிபுரிந்து வந்தார். அவருக்கு பெற்றோர் வரன் பார்த்து வந்தனர். கடந்த 22-ந் தேதி இரவு தபாரக் உல்லா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து ஓசூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொழிலாளி தற்கொலை

சிங்காரப்பேட்டை அருகே உள்ள ரெட்டிவலசை கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (30). கூலித்தொழிலாளி. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இவரது மனைவி இவரை பிரிந்து சென்று விட்டார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட வெங்கடேசன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சிங்காரப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்