இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

Update: 2023-02-08 18:30 GMT

எலச்சிபாளையம்:

திருச்செங்கோடு எட்டிமடைபுதூர் பகுதியை சேர்ந்தவர் விவேகானந்தன். ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி சுமதி (வயது 27). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். சுமதி வீட்டிலேயே இருந்து துணி தைக்கும் தொழில் செய்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சுமதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருச்செங்கோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுமதி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்