தென்பசியார்நாக அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

தென்பசியார் நாக அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.

Update: 2023-01-22 18:45 GMT


திண்டிவனம், 

திண்டிவனம் அருகே தென்பசியார் கிராமத்தில் பிரசித்தி பெற்ற நாக அங்காளம்மன் கோவில் உள்ளது. இங்கு அமாவாசை தோறும் ஊஞ்சல் உற்சவம் நடைபெறும்.

அதன்படி, தை மாத அமாவாசையான நேற்று முன்தினம் அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர், சாமிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது.

இதையடுத்து உற்சவர் அம்மன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு கோவிலை சுற்றி வீதிஉலா வந்தார். பின்னர், அங்குள்ள ஊஞ்சலில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து அம்மனுக்கு தாலாட்டுப்பாடி ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.

இதில் தென்பசியார் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ராம்குமார் அடிகளார் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்