தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கருத்தரங்கம்

கரூரில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கருத்தரங்கம் நடந்தது.;

Update:2023-05-07 00:18 IST

கரூர் மாவட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 40-வது அமைப்பு தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சங்க கொடியேற்றப்பட்டது. பின்னர் சங்க அலுவலகத்தில் அமைப்பு தின சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சக்திவேல் வரவேற்றார். இதில் பொருளாளர் பொன்.ஜெயராம் உள்பட சங்கத்தை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்