தட்சிணகாசி காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை

அதியமான்கோட்டை தட்சிணகாசி காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2022-05-23 16:10 GMT

நல்லம்பள்ளி:

அதியமான்கோட்டை தட்சிணகாசி காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தேய்பிறை அஷ்டமி

தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டையில் உள்ள பிரசித்திபெற்ற தட்சணகாசி காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி விழா நேற்று நடந்தது. அதிகாலை முதல் சாமிக்கு பல்வேறு வகையான சிறப்பு பூஜைகள் நடந்தன. அதிகாலை முதல் சாமிக்கு 108 வகையான நறுமண பொருட்கள் மற்றும் பல்வேறு வகையான பழங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை் மற்றும் சிறப்பு வழிபாடு நடந்தது.

தொடர்ந்து சாமிக்கு 1,008 ஆகம பூஜைகளும், வேத பாராயணம் மற்றும் சிறப்பு அர்ச்சனையும் நடந்தது. பின்னர் சாமிக்கு உபகார பூஜைகளுடன் வெள்ளி கவச ராஜ அலங்கார சேவையும், மகா தீபாரதனையும் நடந்தது. இந்த வழிபாட்டில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் மற்றும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

சத்ரு சம்ஹார யாகம்

இதை தொடர்ந்து இரவு கோவில் வளாகத்தில் சத்ரு சம்ஹார யாகம் நடந்தது. 108 கிலோ மிளகு, 1,008 கிலோ மிளகாய் கொண்டு நடந்த இந்த சிறப்பு யாகத்தில் ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கலந்து கொண்டனர். தொடர்ந்து கோவில் வளாகத்திலேயே சாமி வீதி உலா நடந்தது.

இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் ஜீவானந்தம், கோவில் அர்ச்சகர் கிருபாகரன் மற்றும் விழா குழுவினர் செய்து இருந்தனர்.

கோட்டைக் கோவில்

இதேபோன்று தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜுன சாமி கோவில் வளாகத்தில் கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை யொட்டி சிறப்பு அபிஷேகம், ஆராதனை, வழிபாடு நடந்தது. சாமிக்கு சிறப்பு அலங்கார சேவையும், மகா தீபாராதனையும் நடந்தது. இதி்ல் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.தட்சிணகாசி காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை

Tags:    

மேலும் செய்திகள்