கஞ்சா கடத்திய வாலிபர் கைது

கடமலைக்குண்டு அருகே கஞ்சா கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-10-20 17:15 GMT

கடமலைக்குண்டு அருகே உள்ள வெள்ளை கணவாய் வழியாக கஞ்சா கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கடமலைக்குண்டு போலீசார் நேற்று முன்தினம் இரவு வெள்ளை கணவாய் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கணவாய் வழியாக கையில் சாக்கு மூட்டையுடன் நடந்து வந்து கொண்டிருந்த வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர், சிங்கராஜபுரம் கிராமத்தை சேர்ந்த அருண்குமார் (வயது 21) என்று தெரியவந்தது. மேலும் அவர் வைத்திருந்த சாக்கு முட்டையை போலீசார் சோதனை செய்தனர். அதில், 10 கிலோ கஞ்சா இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இதனையடுத்து கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண்குமாரை கைது செய்தனர். மேலும் கஞ்சா கடத்தல் வழக்கில் சிங்கராஜபுரம் கிராமத்தை சேர்ந்த அழகுராஜா (25), சந்தோஷ் (24), விக்னேஸ்வரன் (22), அல்லாபாய் (26), பிரகாஷ் (29) ஆகிய 5 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. தலைமறைவாக உள்ள 5 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்