அக்னி தோஷ நிவர்த்திக்காக 108 இளநீர் அபிஷேகம்
அக்னி தோஷ நிவர்த்திக்காக 108 இளநீர் அபிஷேகம் செய்யப்பட்டது.
அய்யம்பேட்டை அருகே பசுபதிகோவிலில் புள்ளமங்கை கோவில் எனப்படும் அல்லியங்கோதை சமேத ஆலந்துரைநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் அக்னி தோஷ நிவர்த்திக்காக 108 இளநீரை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.