கனமழை எதிரொலி: 4 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை..!

கனமழை காரணமாக தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-09-01 02:50 GMT

தஞ்சாவூர்,

தமிழகத்தின் பல பகுதிகளில் பருவமழை தீவிரமடைந்து பெய்து வருகிறது.

இந்த நிலையில், டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்து வருவதால் 4 மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

4 மாவட்டங்களின் சுற்றுவட்டார பகுதி முழுவதும் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பள்ளி கல்லூரிகளுக்கு இன்று (வியாழக்கிழமை) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்