பஸ் நிலையத்தில் தொழிலாளி பிணம்

கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் தொழிலாளி பிணமாக கிடந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-06-04 17:06 GMT

கள்ளக்குறிச்சி, 

கள்ளக்குறிச்சி எம்.ஆர்.என். நகரை சேர்ந்தவர் குமார் (வயது 47) தொழிலாளி. இவர் கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் பிணமாக கிடந்தார். இது குறித்த தகவலின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து குமார் மனைவி பரிதா கள்ளக்குறிச்சி போலீசில் புகார் அளித்தார். அதில் தனது கணவர் சாவில் மர்மம் உள்ளது. எனவே இது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்