தோட்டத்துக்கு சென்ற விவசாயி மயங்கி விழுந்து சாவு

கழுகுமலை அருகே தோட்டத்துக்கு சென்ற விவசாயி மயங்கி விழுந்து இறந்தார்.

Update: 2023-06-17 18:45 GMT

கழுகுமலை:

கழுகுமலை அருகே உள்ள கெச்சிலாபுரம் நடுத்தெருவை சேர்ந்தவர் ஞானதுரை (வயது 75). இவருக்கு சுந்தரம்மாள் (70) என்ற மனைவியும், 3 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். ஞானதுரை நேற்று முன்தினம் மதியம் தனது பருத்தி தோட்டத்துக்கு சென்றார். பின்னர் இரவு நேரம் ஆகியும் வீட்டிற்கு வராததால் அவரது உறவினர்கள் அவரை பல இடங்களில் சென்று தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

பின்னர் நேற்று காலையில் அவரது உறவினர்கள் பருத்தி காடு மற்றும் சுற்றியுள்ள காட்டுப்பகுதியில் தீவிரமாக தேடியதில் அவர் தோட்டத்திற்கு அருகே உள்ள வேறு பகுதியில் இறந்து கிடந்தார். தகவல் அறிந்ததும் கழுகுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், ஞானதுரையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததாலும், வயது முதிர்வாலும் அவர் மயங்கி கீழே விழுந்து இறந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்