வாலிபரிடம் வழிப்பறி செய்தவர் கைது

வாலிபரிடம் வழிப்பறி செய்தவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-10-26 21:27 GMT

சேலம் செவ்வாய்பேட்டையை சேர்ந்தவர் மனோஜ் (வயது 31). இவர் சம்பவத்தன்று ஆலமரத்துக்காடு பகுதியில் சாலையில் நடந்து சென்றார். அப்போது வாலிபர் ஒருவர் அவரை வழிமறித்து அவர் வைத்திருந்த செல்போனை பறித்து சென்றார். இது குறித்து மனோஜ் பள்ளப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆலமரத்துக்காடு பகுதியை சேர்ந்த கார்த்திகேயனை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் செல்போன் பறித்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து கார்த்திகேயனை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்