பரமத்திவேலூரில் மயங்கி கிடந்த மூதாட்டி சாவு

பரமத்திவேலூரில் மயங்கி கிடந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

Update: 2023-06-27 18:39 GMT

பரமத்தி வேலூர்

பரமத்திவேலூரில் உள்ள பஞ்சமுக விநாயகர் கோவில் அருகே 70 வயதுடைய மூதாட்டி ஒருவர் மயங்கிய நிலையில் கிடப்பதாக வேலூர் போலீஸ் நிலையத்திற்கு அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இதன்பேரில் அங்கு சென்ற போலீசார் மயங்கிய நிலையில் கிடந்த மூதாட்டியை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். அந்த மூதாட்டி குங்கும நிற சேலையும், காப்பி நிற மேலாடையும் அணிந்திருந்தார். அவர் யார், எந்த ஊர் என்பது குறித்து வேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்