கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி சாவு

வடமதுரை அருகே கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.;

Update:2023-06-13 19:04 IST

வடமதுரை அருகே உள்ள கோவில்யாகப்பன்பட்டியை சேர்ந்தவர் முனியப்பன். அவருடைய மகன் சரவணன் (வயது 19). இவர், 9-ம் வகுப்பு வரை படித்துவிட்டு கூலி வேலைக்கு சென்று வந்தார். கடந்த 8-ந்தேதி இவர், அதே பகுதியில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் தனது நண்பர்களுடன் குளித்தார். கிணற்றில் குளித்துவிட்டு படிக்கட்டு வழியாக அவர் மேலே ஏறினார்.

அப்போது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி படிக்கட்டில் அவர் விழுந்து விட்டார். இதில் படுகாயம் அடைந்த சரவணனை, அவரது நண்பர்கள் மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சரவணன் நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சரவணனின் அண்ணன் நந்தகுமார் வடமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்