வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு

வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருடியவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

Update: 2022-07-26 19:57 GMT


மதுரை புதூர் மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் முருகானந்தம், திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு நிறுவனத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று இரவு இவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் தூங்கி விட்டார். காலை எழுந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த ரூ.2 ஆயிரம், ஏ.டி.எம்.,ஆதார் கார்டுகள் ஆகியவற்றை திருடி சென்றது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மதுரை சதாசிவம் நகர் நக்கீரர் தெருவை சேர்ந்தவர் நாகராஜன். சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்று விட்டார். திரும்பி வந்தபோது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. பின்னர் அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 1 பவுன் 4 கிராம் நகை, வெள்ளி பொருட்கள் திருடப்பட்டு இருந்தது தெரிய வந்தது.இதுகுறித்த புகாரின் பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்