3 ஆடுகள் திருட்டு

Update: 2022-12-23 18:45 GMT

அரூர்:

அரூர் அருகே பெரியப்பட்டியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 40). விவசாயி. இவர் 20 ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டி சென்றுவிட்டு பட்டியில் ஆடுகளை அடைத்தார். பின்னர் மறுநாள் காலை சென்று பார்த்தபோது பட்டியில் கட்டப்பட்டிருந்த 3 ஆடுகள் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து பெருமாள் கோட்டப்பட்டி போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்