காரிமங்கலம் அருகே விவசாயி வீட்டில் 15 பவுன் நகை, பணம் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

விவசாயி வீட்டில் 15 பவுன் நகை, பணம் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்

Update: 2023-06-08 19:00 GMT

காரிமங்கலம்:

காரிமங்கலம் அருேக விவசாயி வீட்டில் 15 பவுன் நகை, பணம் திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நகை, பணம் திருட்டு

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த பேகாரஅள்ளி ஊராட்சி சவுளுர் கிராமத்தைச் சேர்ந்தவர் அருண். விவசாயி. இவருடைய மனைவி குந்தியம்மாள். இவர்கள் அதே ஊரில் நடக்கும் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள வீட்டின் கதவை பூட்டிவிட்டு சென்றனர்.

பின்னர் திரும்பி வந்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 15 பவுன் நகை, ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் ஆகியவை திருட்டு போனது தெரியவந்தது.

வலைவீச்சு

இதுகுறித்து அருண் காரிமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். இந்த திருட்டு சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்