1¾ கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு

சிங்காநல்லூர் அருகே ஓய்வு பெற்ற மின் ஊழியர் வீட்டில் 1¾ கிலோ வெள்ளி பொருட்கள் திருடப்பட்டது.

Update: 2023-09-27 21:00 GMT

சிங்காநல்லூர்

சிங்காநல்லூர் அருகே ஓய்வு பெற்ற மின் ஊழியர் வீட்டில் 1¾ கிலோ வெள்ளி பொருட்கள் திருடப்பட்டது.

மின் ஊழியர்

கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள உப்பிலிபாளையம் சீனிவாசன் கார்டன் பகுதியை சேர்ந்தவர் குருசாமி(வயது 64). ஓய்வு பெற்ற மின்சார வாரிய ஊழியர். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் மகன் உள்ளனர்.

குருசாமியின் வீடு 2 தளங்களை கொண்டது. மேல் தளத்தில் குருசாமி தனது மனைவியுடன் வசித்து வருகிறார். கீழ்தளத்தில் அவரது மகன் வசித்து வந்தார். சமீபத்தில் அவருக்கு ஐதராபாத்தில் வேலை கிடைத்ததால், அங்கு சென்று விட்டார். அதன்பிறகு கீழ்தளத்தில் உள்ள வீடு பூட்டியே கிடந்தது.

வெள்ளி பொருட்கள்

இந்த நிலையில் கடந்த 14-ந் தேதி அருப்புக்கோட்டையில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக குருசாமி தனது மனைவியுடன் மேல்தள வீட்டையும் பூட்டிவிட்டு சென்றார். அதன்பிறகு திரும்பி வந்து பார்த்தபோது, கீழ்தளத்தில் உள்ள அவரது மகன் வசித்து வந்த வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த குருசாமி உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, 1¾ கிலோ வெள்ளி பொருட்கள் திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்