5 பவுன் நகை திருட்டு

திருமங்கலம் அருகே 5 பவுன் நகை திருடு போனது.;

Update:2023-09-20 02:17 IST

திருமங்கலம்,

திருமங்கலம் சிந்துபட்டி அருகே உள்ள காங்கேயநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் காட்டுராஜா (வயது 58). இவருடைய மகன் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவருடைய மருமகள் வீட்டில் உள்ளார். இந்த நிலையில் வீட்டின் பீரோவில் இருந்த 5 பவுன் நகையை நேற்று பார்த்த போது காணவில்லை. இதுகுறித்து காட்டு ராஜா சிந்துபட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்