திண்டிவனம் நகைக்கடையில் நூதன முறையில் 5 பவுன் நகை அபேஸ்

திண்டிவனத்தில் நகை வாங்குவது போல் நடித்து நூதன முறையில் 5 பவுன் நகையை அபேஸ் செய்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2023-10-18 18:45 GMT

திண்டிவனம், 

நகைக்கடை

திண்டிவனத்தை சேர்ந்தவர் திலீப் குமார் (வயது 47). இவர் அதே பகுதியில் உள்ள கிருஷ்ணப்பிள்ளை வீதியில் நகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மகன் பரத் குமார் (20). கடந்த 15-ந்தேதி பரத்குமார் மட்டும் கடையில் இருந்துள்ளார்.

அப்போது, அங்கு வந்த 2 மர்மநபர்கள் பரத்குமாரிடம், நகை வாங்க வேண்டும். டிசைன்களை காட்டுங்கள் என்றனர். அதன்படி, அவரும் நகை டிசைன்களை எடுத்துக்காட்டினார். இதையடுத்து அந்த மர்மநபர்கள் 2 பேரும், பரத்குமாரிடம் நைசாகி பேசி, அவரது கவனத்தை திசை திருப்பினர். அந்த சமயத்தில், ஒருவர் கல்லாப்பெட்டியில் கைவிட்டு, அதிலிருந்த 5 பவுன் நகையை நைசாக எடுத்து பாக்கெட்டில் வைத்தார். இதையடு்த்து அவர்கள் இருவரும் அங்கிருந்து சென்று விட்டனர்.

5 பவுன் நகை அபேஸ்

இந்த நிலையில், கடைக்கு திரும்பி வந்த திலீப் குமார் கல்லாப்பெட்டியை பார்த்த போது, அதில் வைத்திருந்த 5 பவுன் நகை இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போது கடைக்கு வந்த 2 பேர் நகை வாங்குவது போல் நடித்து, நூதன முறையில் 5 பவுன் நகையை அபேஸ் செய்தது தெரிந்தது.

இது குறித்து திலீப்குமார் திண்டிவனம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடியோ ஆதாரங்களை வைத்து, மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்