மோட்டார் சைக்கிள் விபத்தில் வியாபாரி பலி

களக்காடு அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வியாபாரி பலியானார்.

Update: 2022-07-29 19:57 GMT

களக்காடு:

களக்காடு அருகே உள்ள வடக்கு சாலைப்புதூர் வடக்குத் தெருவை சேர்ந்தவர் நடராஜன் (வயது 55). இவருக்கு திருமணமாகி சுகந்தி என்ற மனைவியும், 2 மகன்களும், 1 மகளும் உள்ளனர். இவர் மாவடியில் சுவீட் கடை வைத்து நடத்தி வந்தார். கடந்த 11-ந் தேதி நடராஜன் களக்காட்டிற்கு வந்து கடைக்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டு மாவடிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். சாலைப்புதூர் அருகே உள்ள பாலத்தில் சென்றபோது, மோட்டார் சைக்கிளில் இருந்த பொருள் கீழே விழுந்தது. இதை எடுக்க முயற்சி செய்தபோது, மோட்டார் சைக்கிள் கீழே சரிந்து விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவில் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி களக்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்