ஆவடியில் புறநகர் ரெயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து...!

ஆவடி ரெயில் நிலையத்திற்கு வந்த புறநகர் ரெயிலின் 4 பெட்டிகள் இருப்புப்பாதையை விட்டு கீழே இறங்கி விபத்துக்கு உள்ளானது.

Update: 2023-10-24 01:59 GMT

கோப்புப்படம்

திருவள்ளூர்,

அண்ணனூர் பணிமனையில் இருந்து ஆவடி ரெயில் நிலையத்திற்கு வந்த ரெயில் தடம் புரண்டு விபத்துக்கு உள்ளானது. ஆவடி ரெயில் நிலையத்திற்கு வந்த புறநகர் ரெயிலின் 4 பெட்டிகள் இருப்புப்பாதையை விட்டு கீழே இறங்கி விபத்துக்கு உள்ளானது.

இதையடுத்து அரக்கோணத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி செல்லக்கூடிய ரெயில்களில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ரெயில் தடம் புரண்டதற்கான காரணம் குறித்து ரெயில்வே அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்