பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம்

பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.

Update: 2022-08-05 17:39 GMT

பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் சுப்புலட்சுமி. இவர் மீது பல்வேறு புகார்கள் எழுந்ததாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் அவரை வேலூர் ஆயுதப்படைக்கு மாற்றி வேலூர் சரக டி.ஐ.ஜி. ஆனிவிஜயா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, இன்ஸ்பெக்டர் மீது சில விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் அவர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்