ஆபத்தான நிலையில் இருந்த மரம் அகற்றம்
ஆபத்தான நிலையில் இருந்த மரம் அகற்றப்பட்டது.;
சிங்கம்புணரி,
சிங்கம்புணரி அருகே மேலூர் சாலையில் தாளங்குளத்தில் உள்ள ஒரு குளத்தின் எதிரே பழமை வாய்ந்த மரம் இருந்தது. இந்த மரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள் தீ வைத்தனர். தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைத்தனர். இதில் மரம் எரிந்து நாசமானது. மேலும், தீயில் எரிந்ததால் மரம் ஆபத்தான நிலையில் இருந்தது. இதனால் அப்பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் அச்சத்தில் உள்ளனர். இதையடுத்து ஆபத்தான நிலையில் இருந்த மரத்தை நெடுஞ்சாலை துறையினர் நேற்று அகற்றினர்.