தூத்துக்குடி பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் கூட்டம்

தூத்துக்குடி பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் கூட்டம் நடந்தது.

Update: 2023-06-30 18:45 GMT

சாயர்புரம்:

தூத்துக்குடி யூனியன் கவுன்சில் கூட்டம் புதுக்கோட்டையில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு தூத்துக்குடி யூனியன் தலைவர் வசுமதிஅம்பாசங்கர் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அதிகாரி ஹெலன் பொன்மணி வசந்தா, யூனியன் துணைத் தலைவர் ஆஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 46 தீர்மானங்கள் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் யூனியன் மேலாளர் சண்முகசுந்தரி, யூனியன் கவுன்சிலர்கள், துணை வட்டார வளர்ச்சி அதிகாரிகள், யூனியன் பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்