தூத்துக்குடி மரக்கடையில் எந்திரங்கள் திருட்டு

தூத்துக்குடி மரக்கடையில் எந்திரங்கள் திருடப்பட்டது. இது தொடர்பாக அங்கு பணியாற்றிய தொழிலாளியை போலீசார் தேடிவருகின்றனர்.

Update: 2023-10-26 18:45 GMT

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி திரேஸ்நகரை சேர்ந்தவர் சோலையப்பன் (வயது 40). இவர் பாலதண்டாயுதநகரில் மரக்கடை நடத்தி வருகிறார். இவருடைய கடையில் உடன்குடியை சேர்ந்த மாணிக்கம் என்பவர் கடந்த 2 மாதங்களாக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் மாணிக்கம், கடையில் இருந்த மரம் வெட்டும் எந்திரம், பாலீஷ் போடும் எந்திரம், துளையிடும் எந்திரம் ஆகியவற்றை திருடிக்கொண்டு தலைமறைவாகி விட்டார். அவரை பல இடங்களில் தேடியும் சிக்கவில்லை. இது குறித்து சோலையப்பன் தூத்துக்குடி தாளமுத்துநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் தாளமுத்து நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள மாணிக்கத்தை வலைவீசி தேடிவருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்