குழாய்கள் உடைந்து வீணாகும் குடிநீர்

Update: 2022-06-07 16:03 GMT

குழாய்கள் உடைந்து வீணாகும் குடிநீர்

திருப்பூரில் பல்லடம் சாலையில் நேற்று பல்வேறு இடங்களில் குடிநீர் குழாய்கள் உடைந்து தண்ணீர் வீணாக சாலையில் பாய்ந்தது. இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டும் காணாமல் விட்டுவிட்டனர். இதனால் பல ஆயிரம் லிட்டர் குடிநீர் வீணானது. சம்பந்தப்பட்ட குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து உடைந்து கிடக்கும் குடிநீர் குழாய்களை சரி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

அருண்குமார்,திருப்பூர்.

மேலும் செய்திகள்