சங்கரன்கோவிலில் கணவரால் தாக்கப்பட்ட பெண் சாவு

சங்கரன்கோவிலில் கணவரால் தாக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுதொடர்பான வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-11-24 18:45 GMT

சங்கரன்கோவில்:

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கோமதியாபுரம் புது 2-ம் தெருவை சேர்ந்தவர் தங்கமாரிச்செல்வம் (வயது 41). இவருடைய மனைவி தனலட்சுமி (41). தங்கமாரிச்செல்வத்துக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 7-ந்தேதி தங்கமாரிச்செல்வம் வழக்கம்போல் மது குடித்துவிட்டு வீட்டுக்கு சென்று மனைவி தனலட்சுமியிடம் தகராறு செய்து அவரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த அவர் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதுகுறித்து சங்கரன்கோவில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த தனலட்சுமி சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தார். இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி, தங்கமாரிச்செல்வத்தை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்