கார் மோதி பெண் சாவு

மதுரை பெத்தானியாபுரத்தை சேர்ந்தவர் பாலமுருகன். இவருடைய மனைவி சந்தியா(வயது 26) . இவர் தனது கணவருடன் மோட்டார்சைக்கிளில் சென்றபோது அவ்வழியாக வந்த கார் மோதி சந்தியா பரிதாபமாக இறந்தார்;

Update:2023-02-12 02:55 IST

அலங்காநல்லூர்

மதுரை பெத்தானியாபுரத்தை சேர்ந்தவர் பாலமுருகன். இவருடைய மனைவி சந்தியா(வயது 26). இவர் நேற்று அலங்காநல்லூர் அருகே பொதும்பு பகுதியில் தங்களுடைய புதுவீடு கட்டுவதை பார்க்க பாலமுருகன் தனது மனைவி சந்தியாவுடன் மோட்டார்சைக்கிளில் சென்றபோது அவ்வழியாக வந்த கார் அவர்கள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த சந்தியா தவறி விழுந்து, ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்