மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் சாவு

கடையம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-07-14 16:34 GMT

கடையம்:

கடையம் அருகே உள்ள பாப்பான்குளத்தை சேர்ந்தவர் மாசானம் மனைவி பத்மா (வயது 45). இவர் தனது கணவருடன் கடந்த 6-ந் தேதி ேமாட்டார் சைக்கிளில் கடையத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். வெள்ளிக்குளம் மெயின் ரோட்டில் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறிய போது பத்மா தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பத்மா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆழ்வார்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்