காவிரி ஆற்றங்கரைேயாரம் பெண் உடல் மீட்புயார் அவர்? போலீசார் விசாரணை

Update:2023-01-02 00:15 IST

பள்ளிபாளையம்:

பள்ளிபாளையம் அருகே ஆவத்திபாளையத்தில் உள்ள காவிரி ஆற்றங்கரையோரம் சுமார் 45 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் இறந்து கிடப்பதாக பள்ளிபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பள்ளிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்து கிடந்த பெண் பூப்போட்ட பச்சை நிற சேலை அணிந்திருந்தார். அவர் யார்? எந்த ஊர்? எப்படி இறந்தார்? என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்