தியாகதுருகம் அருகே கிணற்றில் தவறி விழுந்த பெண் பலி

தியாகதுருகம் அருகே கிணற்றில் தவறி விழுந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2022-06-29 17:20 GMT

கண்டாச்சிமங்கலம், 

தியாகதுருகம் அருகே திம்மலை கிராமத்தை சேர்ந்தவர் கொளஞ்சி மனைவி சுசீலா (வயது 49). இவர் நேற்று தனக்கு சொந்தமான வயலில் உள்ள கிணற்றில் தண்ணீர் எவ்வளவு உள்ளது என பார்த்தார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டார். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், சுசீலா ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இதுகுறித்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்